Bright

Thursday, August 30, 2018

வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல

தேர்வில் தோல்வி எதிர்பார்த்த அளவு மதிப்பெண் பெறவில்லை தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம்  என்ற அச்சம் இது பெரும் மனவருத்தம் அளிக்கக்கூடும். வருத்தப்பட்டு அழுவதால் என்ன பலன் அழுவதால்  தேர்வில் வெற்றிபெற முடியுமா, எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியுமா, தேர்வில் தோல்வி அடைந்து  விடுவோமோ என்ற அச்சத்தில் போக முடியுமா, முடியவே முடியாது ஆகவே வருத்தப்படுவதாலும் அழுவதாலும் எந்த பயனும் இல்லை.

credit to https://www.projecttimes.com
                  

இளைஞர்களே    வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல மாறி மாறி வரும் வெற்றி பெற்றவர்கள் யாரும் புத்திசாலி அல்ல புத்திசாலிகள் யாவரும் வெற்றி காண்பதில்லை. வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன் இக்காலத்தில் வாழ்வின் வெற்றிஅடைவான் என்பது சொல்வதற்கில்லை. பெரும்பாலான புகழ்பெற்ற மருத்துவர்கள் பொறியாளர்கள் வழக்கறிஞர்கள் கல்லூரியின் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல. தேர்வில் வெற்றி ஓரளவுக்கு வாழ்க்கைக்கு  உதவலாம் ஆனால் அதுவே  வாழ்க்கையின் வெற்றியின்  ஆகாது.

மருத்துவர் சிவராமன் மட்டுமல்ல புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜன் பல்கலைக்கழக  இடை நிலை தேர்வு தேறவில்லை.  அதற்காக அவர் தனது கணித ஆராய்ச்சியை விட்டுவிடவில்லை.  சென்னையில் எழுத்தாளராக பணியாற்றினார் ஓய்வு நேரத்தில் கணித ஆராய்ச்சியில் தொடர்ந்தார் அவர் உலகப் புகழ் பெற்றார். மறைமலையடிகள், ஈவேரா பெரியார், விஸ்வநாதன் போன்ற பேரறிஞர்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை கூட படிக்கவில்லை. இவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து பேரறிஞர்  ஆகவில்லையா! காமராஜர் பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை அவர் முதலமைச்சராக பணியாற்ற இல்லையா வெற்றி காணவில்லை.

இளைஞர்களே தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காகவும்  மனம் நொந்து போக வேண்டியதில்லை. ஒரு தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதற்காக மனம் தளர வேண்டியதில்லை. உங்கள் திறமை வேறு துறையில் இருக்கலாம். அந்தத் துறையில் நீங்கள் பெரும் வெற்றியை பெறலாம். மனம் வருந்தி அழுது கொண்டு இருந்திருந்தால் என்ன பலன் கிடைக்கிறது  அல்லது தந்தை சொல்கிறாரே இன்று ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தொடர்ந்திருந்தால் இன்று எங்காவது ஓர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததற்காக அழுது கொண்டிராமல் விரக்தி அடையாமல் தமது திறமை இதில் உள்ளது என்பதே உணர்ந்து அதை வளர்த்துக் கொண்டதால் உயர்ந்த தேர்வில் தோல்வியுற்றார். இளைஞரே ஓவியர் அரங்கநாதனை போல் நீங்களும் உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து அதை வளர்த்துக் கொண்டு முன்னேறலாம். மருத்துவர்  சுப்பாராவ்  போலவும் கணிதமேதை ராமானுஜம்  போலவும் நீங்களும் முயன்றால் பெயரும் புகழும் பெற முடியும்.


இன்று உங்கள் நண்பர்கள் யாவரும் ஒரு துறையில் கல்வி கற்க விரும்புகிறார்கள் என்பதற்காக நீங்களும் அதைக் கற்க வேண்டும் என்பது இல்லை. அந்த பட்ட வகுப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக வருந்த வேண்டியதில்லை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் போகும் வழி சாதாரண வழி தலைவர்கள் தாணியாகத்தான் செல்வார்கள் சாதாரண மக்கள் அவர்கள் பின்னால் செல்வார்கள் சராசரி  மனிதனே எல்லோரும் போகும் வழியில் போகும் மேலான திறமை உடையவர் தமக்கென்று ஒரு வழியை தேர்ந்தெடுத்து கொள்வார். நீங்களும் மற்றவர்களுக்கு முன்னோடியாக முடியும் நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

Wednesday, August 29, 2018

மற்றவர்கள் மீது பழிபோட்டு பேச காரணம் என்ன

ஒவ்வொரு பிரச்சனைகளில்  இருந்து வெளியே வருவதற்கு அதற்கு  தொடர்புள்ள சில உணர்வுகளை நாம் அனுபவிக்க வேண்டும். பழிபோட்டு பேசக்கூடாது என நினைப்பவர்கள்  எப்போது நான் அந்த  துரோகத்திற்கு  ஆளானேன் எப்போதும் எனக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காமல் போனது   அதுபோல எப்போது நான் ஏமாற்றப்பட்டேன் என்று நினைக்காமல். அந்த நிலையை மீண்டும் மனநிலைக்கு கொண்டு வந்து அதை அனுபவிக்க வேண்டும்.

credit to https://www.luckylookonline.com


அது போன்ற நிலைக்கு செல்லும் போது ஒரு கோபம் வரலாம், அதிகப்படியான  பீதி வரலாம்கண்ட்ரோல் பண்ண முடியாத அழுகை வரலாம், உதாரணமாக ஒருவருக்கு அண்ணன் தம்பி சொத்து தகராறில் சொத்து கிடைக்க வில்லை என்றால் நாட்கள் செல்ல செல்ல கூட்டுக் குடும்பத்தை பற்றிய தவறாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அண்ணன் தம்பி என்றாலே மோசடி செய்துவிடுவார்கள் என்று பழி போட்டு பேச ஆரம்பித்து விடுவார். இது போன்ற நேரங்களில் அன்றைய நேரத்தில் வராத கோபம் மற்றும் உணர்வுகளை இந்த சமயங்களில்வெளிப்படுத்த வேண்டும். அந்த உணர்வுகள் அத்தனையும் ஒரு கடிதத்தில் எழுதி தீர்த்துவிடலாம் அல்லது வேறு ஒரு ஆலோசகரின் பார்த்து மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விடலாம். இன்று போல அன்று பேச வேண்டும் என நினைத்தேன் ஆனால் முடிய வில்லை  இன்று பேசுகிறேன்  இதனால்  துரோகம் செய்தவர் எந்த வகையிலும் பாதிக்க மாட்டார் ஆனால் நம் மனதில் இருக்கக்கூடிய உணர்வுகளை பழிபோடும் செயல்களையும் இதன் மூலம் அகற்ற முடியும் துரோகம் செய்தவர் திருந்த மாட்டாரு அவரது குணமே அப்படி தானா என்று  தவறை உணராத மனிதரை பற்றி சிந்தித்து உங்கள்  மனது பாதிக்கப்படுவது விடுத்து இது போன்ற செயல்களை உங்கள் மனதை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.

  நீங்கள் உங்கள் கற்பனையிலேயே அவர் தவறை உணர்ந்து விட்டார் என கற்பனை செய்து உங்கள் பிரச்சனையை விடுவித்துக் கொள்ளுங்கள். எதிர் தரப்பில் துரோகம் செய்தவருக்கும் ஒரு நியாயம் உள்ளது. அவருடைய நிலையிலிருந்து அந்த நியாயத்தை பாருங்கள் அதை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்து விடுங்கள். யார் மன்னிக்கவும் அவரை மிக  வலிமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் ஒரு மன ஆறுதல் கிடைக்கும் அதை விடுத்து நம்மை ஒருவர் ஏமாற்றிவிட்டார் துரோகம் செய்து விட்டார் எனக் கூறிக் கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர் மீது பழி போட்டு அவரை பழிவாங்க காத்திருப்போம். ஆனால் எதுவும் இல்லாத சூழலில் பிறகு நம்மை நாமே  வெறுக்க ஆரம்பித்து விடுவோம்.  நான் இப்படி போய் ஏமாந்து விட்டேனே நான் என்ன புத்திசாலி என்னை விட கேவலமான யாரும் கிடையாது என சுய மதிப்பை இழந்து விடுவீர்கள். நம்மை நாமே  வெறுத்து கொள்ளும் நிலைக்கு சென்று கொண்டே இருக்கும். நம்மிடமே கடுமையான கோபம், அதை சார்ந்த வந்த ஒரு தூக்கம், இப்படி ஏமாந்து விட்டோமே என்ற பீதி, அதன்பிறகு துன்பம், என்ற இந்த நான்கு உணர்வுகளும் உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று மிக இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்லும் இதுபோன்ற செயல்களை தவிர்க்க முன்பு கூறிய உளவியல் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகும்.

                           படிப்பே வராத மாணவனை பன்னிரண்டாம் வகுப்பு தோல்வியுற்ற மாணவனை 60 லட்சம் பணம் கொடுத்து மருத்துவ சீட்டை வழங்கியுள்ளனர். அந்த மாணவனை மருத்துவம் படிக்க வேண்டும் என குடும்பத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். அந்த மாணவன் மருத்துவத்தை படிக்க முடியவில்லை நிறைய பாடங்களில் தோல்வி அடைந்தார் இதை எதிர்கொள்ள முடியாமல் போதை மருந்து போன்ற பிரச்சனைகளுக்கு அடிமையாகிவிட்டான். இப்போது அந்த மாணவனின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியானது. இப்பொழுது அந்த மாணவனின்  நிலைக்கு யார்  காரணம்  என்பதை கூறுங்கள். ஆனாலும் பெற்றோர்கள் அந்த மாணவனையே குறை கூறுகின்றனர் ஆனால் உண்மையான பிரச்சனை பெற்றோரிடம் உள்ளது. இதை அவர்கள் உணராமல் மேலும் மேலும் தவறு செய்கின்றனர். இதே நிலைதான் பல இடங்களிலும் நடக்கிறது. அதை திருத்தி கொள்ளுங்கள்.

அபிப்ராயங்கள் எப்படி உருவாகிறது

நாம் பல நேரங்களில் எப்படி சரியாக  முடிவு எடுக்க  வேண்டும் அது போன்ற குழப்பமான நேரங்களில் நாம் எடுக்கின்ற முடிவுகள் எப்படி  இருக்கின்றன என்பதைப் பற்றி உதாரணத்துடன் பார்த்துக்  கொண்டிருந்தோம்.  இது எல்லாம் இயற்கையானது நாம் கவனித்ததில் மட்டும் சற்று கவனம் செலுத்தினாலே போதுமானது இயற்கையோடு இணைந்து வாழ  முனைந்தாலே  பல பிரச்சினைகளை இயல்பாகவே தீர்த்து விடலாம்.

credit to https://www.yarl.com


ஒரு குழாயில் கலங்கிய நீர் வந்தால் அதை உடனே சரி செய்து விட முடியாது சற்று நேரம் அமைதியாக வைத்தாலே தானாகவே தெளிந்துவிடும். அதே போல தான் நம்முடைய வாழ்க்கையில் சண்டைகள் சர்ச்சைகள் குழப்பங்கள் வரும் போது கலங்கிய நீர் பல குழப்பங்கள் வரும். அது போன்ற நேரங்களில் நம்முடைய உணர்வுகளை சரியாக புரிந்து நம் கோபப்படுகிறோமா  வருத்தப்படுகிறோமா பயப்படுகிறவன் வெறுப்பில் உள்ளான் என்பதை தனிமையில் அமர்ந்து அந்த உணர்வுகள்லோடு நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை மறக்கக்கூடாது அந்த உணர்வுகள் இருக்கும் போது நாம் பார்க்கக் கூடிய பார்வையே வேறுவிதமாகத்தான் இருக்கும். அது நமக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ மஞ்சள் நிற கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கும்போது அனைத்துமே மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். இது எல்லாம் மஞ்சள் தான் என்று நான் கூறினேன் அது என் அறியாமை நம் உணர்வுகள் மேல் ஓங்கி இருக்கக்கூடிய மன நிலைகளில் நம் உலகத்தை பார்க்கும் காட்சிகள் மற்றவர்களுக்கு தெரிவது போல நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் பல விஷயங்களை கண்டறிவதுதான் உண்மை என்கிறோம். இதனால் பல விஷயங்களை அறிய முடியவில்லை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அனுபவங்கள் பல விஷயங்களில் நம்மை வழிநடத்துகிறது இந்த மாதிரியான குழப்பமான நேரங்களில் மன்னிக்க மாட்டோம் சில விஷயங்களை மறக்க மாட்டோம் அதிகப்படியான கோபங்கள் அதிகப்படியாக பெரிதுபடுத்துவது அல்லது பெரிய விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது. கணவன் குடித்துவிட்டு குழந்தைகளை அடிக்கும்போது அதை பெரிதுபடுத்தாமல் கணவனுக்கு பயந்து அது ஒரு சிறிய விஷயமாக மாற்றுவது. இதுபோன்ற பீதி இருக்கக்கூடிய நேரங்களில் கோபம் இருக்கும் நேரத்தில் அந்த விஷயத்தை சரியான விகிதத்தில் பார்வை பார்ப்பது என்பது இயலாத விஷயம் இதனால் தான் பெரியவர்கள் அன்றைய காலத்தில் கூடவே இருந்து குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரியான விகிதத்தில் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தனர். தேவையான ஆலோசனையும் வழங்கினார் எந்த ஒரு பலவானாக இருந்தாலும் தூக்கத்தில் அடித்தாள் எதுவுமே செய்ய முடியாது அவர்களுடைய திறமை வெளியே வந்து விடாதே நாம் சோர்வடைந்த நிலையிலோ  நம் உணர்வு இழந்த நிலையில் சில நேரங்களில் சில விஷயம் தவறுதலாக பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதையெல்லாம் புரிந்து பழக வேண்டும் இலக்கு ஆகக்கூடிய நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

 சேலை கட்டிய பெண்கள்தான் பத்தினி என்றால் அது ஒரு நம்பிக்கை அதற்காக ஒரு பெண் நவீன ஆடை அணிந்து  வந்தாள் அவர்களை தவறாக கூற முடியாது. இதுபோன்ற அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொள்வது இது என்னுடைய நம்பிக்கைதான் இது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது உண்மையாக இருக்க வேண்டும் என இருக்கக் கூடாது  இது போல  நினைக்கும்போதே மற்றவர்கள் கூறுவதை நாம் கவனிப்போம்.

    
குடும்பம் பள்ளி நாடு அரசியல் சமூகம் எல்லா இடத்திலும் அவர் அவர்கள் கூறுவது தான் சரி என தீர்மானத்தோடு பேசுகிறார்கள். இது ஒரு கருத்து தீவிரவாதமாகும் இதற்கு உளவியல் காரணங்கள் என்ன ஏன் மற்றவர்களை தீர்மானமாக பழிபோட்டு பேசுகிறோம்.  ஏதோ ஓர் இடத்தில் நான் பழிவாங்கப்பட்டு இருப்போம், நாம் ஏமாற்றப்பட்டு இருப்போம், அல்லது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான  நியாயங்கள் கூட  கிடைக்காமல் துரோக படுத்தப்பட்டிருந்த நமக்கு துரோகம் நடந்தது. அநீதி நடந்தது என்கிற போது அதை எதிர்க்க முடியாத நிலையில் நாம் இருந்திருப்போம். நம் கருத்தை கூற முடியாத அல்லது கூறினாலும் தண்டிக்கப்படக் கூடிய இடத்தில் இருப்போம் அப்போது தானாகவே மற்றவர்கள் மீது பழி போட்டு பேசுவது நம் சுபாவத்தில் சாதாரணமாக வந்துவிடும். இதுதான் உளவியல் ஆய்வில் கண்டறிந்த விஷயங்கள் ஒரு சிலர் எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் மற்றவர் மீது பழி போட்டு பேசுவார்கள்  என்ன விதமான தீங்கு நடந்திருந்தாலும் குடும்பம் மற்றும் சமுதாயம் என எதுவாக இருந்தாலும் எனக்கு என்ன நிகழ்கிறதோ அதற்கு நானே முழுப்பொறுப்பு என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் பெண்கள் இன்று பல நேரங்களில் தன்னுடைய உரிமை பாதிக்கப்படுவதாகவும் தன்னை யாரோ பழி வாங்குவதாகவும் தனக்கு துரோகம் நடப்பதாகவும் பெரிதளவில் பீதி அடைகின்றனர் இதனால் பல விஷயங்களில் குழப்பம் அடைகின்றனர் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

தற்கொலைதான் சரியான தீர்வா

இன்றைய சமுதாயத்தில் கடந்த 19ம் நூற்றாண்டில் இல்லாத பெரும் அதிசயம்  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இன்று  பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ள தற்கொலை கலாச்சாரம் பற்றி இன்னும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. எழுத்து என்பது சமூகத்தில் காணப்படும் சிலர்களை மட்டும் அலசி ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவது இல்லை. படிக்காத ஏழை எளிய பாமர மக்களும் பயன்படும் வகையில்  அமைந்தால்தான் மக்கள்  சமூகத்திற்கு அது பெரிதும் பயனளிப்பதாக அமையும். நம்மை சுற்றியுள்ள மக்கள் படும் இன்னல்களை எடுத்து ஆராய்ந்து அதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் இந்த பதிவை பதிவு செய்கிறோம்.

credit to http://kiowacountyindependent.com

இன்றைய மக்களை பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனை  தற்கொலை பிரச்சினைகள்தான். இந்த உலகம் போட்டி உலகம் படிப்பில் வேலைப்பாடுகளில் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இத்துடன் இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினையா தோன்றுகிறது காதல்காதல் என்பது படிப்பில் தோல்வி அடைந்தாலும் அல்லது படித்து முடித்த பின்பும் நீண்ட நாள் வேலை கிடைக்காது போய்விட்டால் வாலிப பருவத்தில்தான் ஆண் பெண் இருபாலரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் அல்லது ஒருதலைக் காதல் வெற்றி பெறாது போய்விட்டால் உடனே இதற்குத் தீர்வு தற்கொலை தான் முடிவு என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள்.  இதற்கு காரணம் தன்னம்பிக்கை இல்லாத போதும் உடன் இருப்போர்  எள்ளி நகையாடல் பெற்றோர் இளைஞர்களின் மனதை புரிந்து கொள்ளவும் அவர்கள் காதலுக்கு குறுக்கே நின்றால், போன்றவைகளை இளைஞர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. என்பது இளைஞர்களின் மனநிலை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய கடமை உடனிருப்பவர்களே உண்டு என்பதை உடனிருப்போர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
              
திருமணமாகி கணவனை விட்டு வேறொருவரை ஊர் அறியாமல் விரும்பி பின்னர் ஊர் அறிந்த பின் தற்கொலை செய்யும் பழக்கத்தை கண்டிக்கிறது. இன்றைய சமூகத்தில் பல ஆடவரை விரும்பும் பெண்களும் பெருகி வருகின்றன. இதையே பொந்ருதாக்   காமம் என்றார் தொல்காப்பியர் ஆணும் பெண்ணும் மனக்கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதை இளைஞர் மத்தியில் தெளிவாக கூறி அவர்கள் மனதில் உறுதிப்படுத்த வேண்டும்.
             

நம் நாட்டின் பிரச்சினையும்  பல உண்டு அவைகளின் தற்கொலை முக்கியமான ஒன்று  இன்றைய சூழலில் பலவிதமான காரணங்களினால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த  மதிப்பெண் பெற மாட்டோம், போராட்டம், காதலில் தோல்வி, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ,புகுந்த வீட்டில் கொடுமைகள், பணி செய்யும் இடத்தில் பிரச்சனைகளை, கடன் தொல்லை, இன்னும் பல பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை நிகழ்கிறது. பெரும்பாலான தற்கொலைகள் பல நாட்கள் சிந்தித்து திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஆகவே தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்கள் உடன் இருப்போர்க்கு அதை தெரியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்தால் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்கலாம். தேவையான ஆதரவும், அறிவுரையும், வழிகாட்டுதலும்,  பொதுவாக தற்கொலையை தவிர்க்க உதவும்.
       

குழப்பமான நேரத்தில் எந்த முடிவையும் எடுக்காதிங்க

குழப்பங்களால் வரக்கூடிய பிரச்சினைகள் என்ன அந்த நிலையை எப்படி புரிந்து கொள்வது அதிலிருந்து எப்படி வெளிவருவது. வரலாறு, வாழ்வியல், சமூக அமைப்பு போன்ற வரலாறுகளை படிக்கும்போது ஒவ்வொன்றுமே சுவாரசியமாக இருக்கும் பல விஷயங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கும் எந்த ஒரு காலகட்டத்திலும் நம்மை சுற்றி பல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

  சமூகம் சில விதிகளை வைத்திருக்கும், சட்டமும் சில விதிகளை வைத்திருக்கும். இது நாட்டுக்கு நாடு, தலைமுறைக்கு தலைமுறை மாறிக்கொண்டே இருக்கும். சிக்கலே இல்லாமல் நார்மலாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனையே இருக்காது. தெளிந்த நீரோடை போல சென்றுகொண்டிருக்கும். யாருமே  சவாலை விரும்புவதில்லை எனக்கு இந்த சேலஞ்சை வேண்டும் என்றும் இருந்ததில்லை அப்படி நினைக்காத போதும் சிலருக்கு இது போன்ற சவால் நிறைந்த வாழ்க்கை அமைந்து விடுகிறது. இந்த மாதிரியான கட்டளைகளை  தாண்டும்போதே இந்த விதிகளை எப்படி கடைபிடிக்க முடியும்.
credit to dinamalar.com



 இந்த விதிகளை மீற வேண்டுமா வேண்டாமா என ஆய்வு செய்யாமல்  குழம்பிக் கொண்டே இருக்கின்றோம். இதனால் மேலும் மேலும் குழப்பம் ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்தால்   அது மட்டுமே இறுதியாக இருந்தது. அதன்பிறகு மறுமணம் என்பதே கிடையாது விவாகரத்து விதவை திருமணம் நடைமுறையில் இல்லாதா கால கட்டமாக  இருந்தது. இது பெரிய அளவில் பெண்களின் நடுவே ஒரு கொடுமையான விதிமுறைகளாக இருந்தது பெண்கள் பிறரை சார்ந்தே இருந்தனர். சிறு வயதிலேயே திருமணம் முடித்தனர் பதினைந்து வயதில் விதவை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அதன் பிறகு அவர்களது வாழ்க்கை மற்றவரை சார்ந்து இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு தனது பெற்றோரையோ அல்லது உடன்பிறந்த சகோதரனையோ நம்பி இருக்கக்கூடிய சூழல் இருந்தது. சகோதரனும் திருமணமாகி மனைவியுடன் வீட்டுக்கு வரும்பொழுது இரண்டு பெண்களுக்கு நடுவே போட்டி ஏற்படுகிறது வீட்டில் பிறந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படுகின்ற  நீ பெரியவனா நான் பெரியவனா என்ற சர்ச்சை மகனை வைத்து மாமியார்-மருமகளுக்கும் இடையே போட்டி பெண்களே பெண்களுக்கு எதிராக உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பின்மை சார்ந்திருத்தல் தன் பிள்ளை இடத்தில் இருந்து வரக்கூடிய அன்பு அல்லது பொருள் மனைவி வருவதன் மூலம் தன்னிடம் வராமல் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே எனக்கு தான் முன்னுரிமை வேண்டும் எனவே இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை வளர்ந்துவரும்  நிலையில் அந்த வீட்டுக்கு விதவை கோலத்தில் இன்னொரு பெண் உள்ளே வரும்போது ஏற்படுகின்ற சிக்கல் அதிகமாகவே இருக்கும்.

அன்றைய காலத்தில் இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே விதவைப் பெண்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அதனைப் என்னுடைய ஆளுமை குறைப்பதற்காகவும் வாழ வந்த பெண்ணிற்கு சிக்கலில்லாமல் இருப்பதற்காகவும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தினர். பல மூடநம்பிக்கைகள் வந்ததற்கு காரணம் அன்றைய காலகட்டத்தில்  அதற்கான ஒரு நியாயம் இருந்தது அந்த காலகட்டத்தை கடந்து உடனே அதை அபத்தமாக நினைக்கின்றோம். இன்று ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக   18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்தால் அந்தத் திருமணம் செல்லாது என்று சட்டம் உள்ளது. அந்த பெண்ணுக்காக ஒரு சமூக அமைப்பு பேசக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிற பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நம்முடைய நன்மைக்காக சமூக விதியும் சட்டமும் என்னென்ன கொடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காலகட்டத்திலும் சமூக விதிகளும் சட்டங்களும் பலவற்றையும் உள்வாங்கி தான் உருவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கைகள் விதிகள் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு தருவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 அதை மனிதர்கள் மீறும்போது அந்த விதிகள் தளர்த்தப்படுகிறது  பெண்கள் மறுமணம் புரியலாம் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்லலாம் போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதை சில பெண்கள்  தவறுதலாகமீறும்போது  பல குடும்ப அமைப்புகள் சீரழிகின்றது குழப்பங்கள் எப்படி உருவாகிறது என்பதைக் குறித்து விவாதித்துள்ளோம். பிரச்சினை இல்லாத நேரத்தில் மனரீதியான சிக்கலையோ சண்டையோ ஏற்படும்போது அதைப் பொருட்படுத்தாமல் மன்னித்து விடுவோம். அது போலத்தான் பல குடும்பங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது பாதுகாப்பு இல்லாத பொருளாதார உதவிகளை பாலியல் உறவும் திருப்தி இல்லாத நிலையில் அந்த கணவன் சிறு பிரச்சினை செய்தாலும் அது பெரும் பிரச்சினையாகவே தெரிகிறது. அதே போல அந்த ஆணுக்கும் அதன்பின் எந்தவிதமான ஆறுதல் கடமை உணர்வும் பொறுப்புணர்வும் இல்லாமல் அந்த ஆண்னிடம் என்னுடைய எதிர்பார்ப்பு குறையும் போது அந்தப் பெண் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிதாக பூதாகரமாக பார்ப்பார்.

பார்வைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பது அந்த தனிப்பட்ட மனிதனின் மனவளமையை பொறுத்தே உள்ளது. ஒரு ஆரோக்கியமான நிலையில் உள்ளவர் எளிதாக மன்னித்து விடுவார் அது எல்லோராலும் முடியாது. ஏற்கனவே ஒரு கோபத்தில் அல்லது  வெறுப்பில் உள்ள போது நம்முடைய பார்வையே திரிக்கப்பட்டு நாம் பார்க்கும் விதமே வேறு விதமாக செல்கிறது. மேலும் பலவிதமான குழப்பங்கள் வருகிறது அந்த குழப்பங்களுக்கு தீர்ந்த ஆலோசனை பெறாமல் மேற்கொண்டு மேற்கொண்டு சில விஷயங்களை செய்யும் போது அது பெரிய செயலாக மாறுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது தனிப்பட்ட ஆணும் பெண்ணும் பாதித்தால் எந்த இடத்திலையும் சிக்கல் ஏற்படாது. ஆனால் குழந்தையும் அவர்கள் சார்ந்த குடும்ப அமைப்பும் பாதிப்பு ஏற்படும்போது மிகப்பெரிய வலியை குடும்பத்திற்கு மட்டும்மல்லாது இந்த சமூகத்திற்கும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் இருப்பதே முக்கியமான குடும்ப வாழ்வில் உள்ள பல பிரச்சனைகளை தடுக்கும்.

குழப்பமான நேரத்தை எப்படி கடந்து செல்வது

குழப்பமான நேரத்தை எப்படி கடந்து செல்வது அப்படி கடந்து வர முடியாத நேரங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு என்னவிதமான தாக்கங்கள் ஏற்படுகிறது என்பதைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். குழப்பம் என்பது ஒரு இழப்பையோ அல்லது எதிர்பார்ப்பு நடக்காத சமயங்கள் வரக்கூடிய நிலை. இந்த மாதிரியான நேரங்களில்  பொதுவாக செய்வது ஏதாவது செய்து அந்த இழப்பை ஈடு செய்து விட முடியுமா அந்த இழந்தது திருப்பி கிடைத்துவிடுமா என்று யோசித்துக் கொண்டிருப்போம்.


உதாரணத்திற்கு கணவன்-மனைவி இடையே ஒரு பிரச்சினை என்றால் எப்பொழுது பார்த்தாலும் ஒரு சோகமான சூழலிலேயே பணி செய்து கொண்டிருப்பார்கள் அதை பார்த்த சக ஊழியர் ஏன் இப்படி உள்ளீர்கள் டீ காபி சாப்பிடலாம் என்று கூப்பிடுவார்கள். பிறகு  இவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசி இவர்கள் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சினை இருக்கக் கூடிய சூழலில் இவர்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதை விடுத்து இருவரும் தனித்தனியே மனநல ஆலோசனை மேற்கொண்டிருந்தால் இருவருடைய குடும்ப பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

credit : 3.bp.blogspot.com


அதை விடுத்து இவர்கள் செய்யும் இந்த செயல் இவர்களை மட்டுமல்லாது அவர்களது இரு குடும்பத்தையும் பாதித்து விடுகிறது. இருவரும் பேசுவதால் மன நிம்மதி கிடைக்கிறது.  திரைப்படத்துக்கும் வெளியில் செல்வதால் சிறுசிறு சந்தோஷம் மட்டுமே கிடைக்கிறது அந்த மகிழ்ச்சியால் தன்னுடைய பிரச்சினைகள் தீர்ந்து நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்கும் என தவறான முடிவை எடுக்கின்றனர். எதையுமே எதிர்கொள்வதற்கு ஒரு முறை உள்ளது. விளம்பரப்படுத்தப்படும் எந்த பொருளையுமே சற்று தள்ளி வைத்து தான் பார்க்க வேண்டும் இதை மட்டும் செய்தால் எல்லா விதமான பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று ஒரு விளம்பரம் செய்கின்றனர்.


இந்த மாதிரியான நிகழ்வுகள் கேட்டவுடனே உடனே முடிவு கிடைக்க வேண்டும் என போகும்போது எளிதாக அவர்களுக்கு இலக்காகிவிடுகிறோம். அவர்களுக்கு விற்பனை மட்டுமே ஆகுமே ஒழிய நமக்கு எந்தவித சிக்கலையும் குழப்பத்தையும் தீர்க்காது. உடனடி தீர்வு  என்பது பொய் தயவுசெய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காலம், பொறுமை, சகிப்புத்தன்மை இந்த மூன்று மட்டுமே எந்த ஒரு குழப்பத்தில் இருந்தும் உங்களை வெளியே கொண்டுவர முடியும் அது நோயாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சினை ஆனாலும் சரி வேறு எந்த விதமான குழப்பமாக இருந்தாலும் சரி காலம் என்பது உள்ளது. அதற்கு பொறுமையாக நாம் இருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை மிக அவசியமாக உள்ளது இதை யெல்லாம் முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏ.டி.எம் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதில் கிடைக்கக்கூடிய   வருவாயை  தனக்கும்  தனது குடும்பத்திற்கும் செலவு  செய்தது போக மீதி தொகையை   சிக்கனமாக வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள  மக்கள் தொகையில் 70 விழுக்காடு மக்கள் வங்கிகளில் தங்கள் சேமிப்பில் வைத்துள்ளனர். பெரும் சிரமப்பட்டு தொழிலில் வரும் ஒவ்வொரு வருமானத்திலும் சேமித்து வங்கிகளின் வைக்கின்றனர். 



ஆனால் தற்சமயம் வங்கிகளில் சேமித்து வைக்கும் தொகையானது ஒரு சில கொள்ளை கும்பல்களால்  எளிதாக கொள்ளையடிக்கப்படுகிறது. அவர்கள் வங்கிகளில் நேரடியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கிடையாது அதற்கு மாறாக நம்முடைய அறியாமையை வைத்து  நமது வங்கிக் கணக்கு கொள்ளையடிக்கின்றனர். இதற்கு நாம் தான் முழுப் பொறுப்பு மிகவும் அஜாக்கிரதையாக வங்கிகளின் விபரங்களை மற்ற நபர்களுக்கு தரும்போது அவர்கள் அதை பயன்படுத்தி எளிய முறையில் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதன் பிறகு சேமித்த தொகை அனைத்தையும் இழந்து விட்டு  வங்கிகளின்  உதவியையும் காவல்துறையின் உதவியையும் நாடிச் செல்கின்றோம். இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்த பிறகு கொள்ளையடித்த பணத்தில் மீட்டெடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.  எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க  வங்கி கணக்கை எப்படி பராமரிக்க வேண்டும் ஏடிஎம் கார்டு, ஏடிஎம் இயந்திரம், போன்றவற்றில் பணம் எடுக்கும் போதும், பணத்தை போடும் போதும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

பெரும்பாலான   கொள்ளை சம்பவங்கள்  மூன்றாம் நபரிடம் நம்முடைய ஏடிஎம் கார்டின் பின் நம்பரை சொல்வதன் மூலமாகவே நிகழ்கிறது. எனவே எந்தக் காரணம் கொண்டும் தெரியாது மற்றும் மூன்றாம் நபரிடம்  ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பகிர்ந்துகொள்ள வேண்டாம். இந்த நம்பரை வங்கியில் வேலை செய்யும் அலுவலர்கள் கேட்டால் கூட கொடுக்க கூடாது. இதன் மூலமே பெரும்பாலும் கொள்ளைகள் நடைபெறுகிறது. பெரும்பாலான கணவன்மார்கள் தன்னுடைய மனைவியின் ஏடிஎம் கார்டு நம்பரை இவர்கள்  பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவருடைய கார்டு நம்பர் அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கணவன் பயன்படுத்தும்போது இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் கூட அதில் உள்ள பணத்தை மீட்டு எடுக்க முடியாது.

குறைந்தது அறுபது  நாட்களுக்கு ஒருமுறையாவது ஏடிஎம் கார்டின் பின் நம்பரை மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிக் கொண்ட நம்பரை  வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இதை  வங்கிகள் அறிவுறுத்துகின்றனர். ஏடிஎம் கார்டின்  பின் நம்பரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அவற்றை ஏடிஎம் கார்டின்  பின்புறத்தில் எழுதி வைக்கக் கூடாது. இதனால் உங்களது கார்டு  தொலைந்து விட்டால் கூட மற்றவர்களால் எளிதில் பணத்தை எடுக்க முடியாது மூன்று முறைக்கு மேல் தவறான  எண்களை  டைப் செய்தாள்  தானாகவே ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் உங்கள் வங்கியில் உள்ள பணம் பாதுகாக்கப்படுகிறது. 

ஒரு சிலர் தொடர்ந்து அதிகளவில் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர் குறைந்தது மாதத்திற்கு 3 லிருந்து 5  முறை மட்டுமே பயன்படுத்துங்கள்  இதனால் உங்கள் வங்கியில்  பரிவர்த்தனைகளும்  உங்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் குறையும். தொடர்ந்து அடிக்கடி ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும்  போது  எளிமையாக உங்களை பின்தொடர்ந்து உங்கள் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முடியும். எனவே  தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதில் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்துகின்றனர். ஒவ்வொரு முறை ஏடிஎம் இயந்திரத்திற்கு செல்லும் போதும் உங்களது இருப்புத் தொகையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒவ்வொருவரும் அவசியம் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு வேளை  இருப்பு தொகைகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நேரடியாக வங்கியின் உதவியை அல்லது வங்கியின் இலவச தொலைபேசி எண்ணை மட்டுமே அழைத்து  அவரிடம் ஆலோசனை பெற வேண்டும் வேறு எவரின் உதவியும் நாடக் கூடாது. ஒருவேளை மற்றவரின் உதவியை நாடினால் உங்களுக்கு உதவி செய்வது போல உங்களது  வங்கியில் உள்ள பணத்தை  கொள்ளையடித்து விடுவார்கள்.

கார்டு தொலைந்துவிட்டால் காலதாமதமின்றி உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விடுங்கள். இதன் மூலமாக கார்டில்  ஏற்படும்  பண பரிவர்த்தனைகள் தடுக்கப்படும்.  ஒருவேளை கார்டு  கிடைத்து விட்டால் கூட உங்கள் கார்டை  மீட்டேடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை ஏடிஎம் நுழைந்தவுடன் உங்களை சுற்றி உள்ள சூழ்நிலையில் கவனிக்க வேண்டும். ஒருவேளை தொடர்ந்து ஒரு குழுவோ ஒரு நபர் உங்களை பின்தொடர்ந்தாள் அவரைப் பற்றிய தகவல்களை வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். ஏடிஎம் நுழைந்த உடனே நீங்கள் மட்டுமே உள்ளதை உறுதி செய்தபிறகு  மட்டுமே உங்களது பின் நம்பரை  பயன்படுத்த வேண்டும்.  கார்டு பொருத்தப்படும் இடத்தில் ஏதேனும் மெல்லிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும்  சோதித்து  கொள்ளுங்கள்.


பயன்படுத்திய பிறகு ஏடிஎம் கார்டை அதற்குண்டான சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏடிஎம்  கார்டை கண்ட இடங்களில் போட்டு வைக்கக்கூடாது இதனால் எளிதாக  தொலைந்து போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கார்டை யாரிடமும் கொடுத்து பணத்தை  எடுத்து வர சொல்லக்கூடாது. மேலும் முதன் முறையாக  கார்டின் பின் நம்பரை பதிவு செய்யும்போது   வெளியாட்களின் உதவியை  நாடக்கூடாது. பின் நம்பரை மாற்ற வேண்டுமென வங்கிகளில் கூறினால்  அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.  வங்கி கூறியவுடன்  பின் நம்பரை மாற்றி அதன் பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு    வங்கியே முழு பொறுப்பேற்று உங்களது பணத்தை பாதுகாப்பாக திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.  வங்கி  கூறிய பிறகு பின் நம்பரை  மாற்றாமல் அலட்சியமாக இருந்தால் அதன்பிறகு  ஏற்படும் அசம்பவிதத்திற்கு வங்கி  எந்தவகையிலும் பொறுப்பேற்காது. எனவே வங்கி  அறிவுறுத்தலின்படி ஏடிஎம் கார்டை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். 

இதுபோன்ற செயல் முறைகளை தொடர்ந்து பின்பற்றினாலே ஏமாற்றுபவர்களிடம் இருந்து உங்கள் வங்கி  பணத்தை பாதுகாப்பாக வைக்க முடியும்.  இதை தாங்கள் மட்டுமே பயன்படுத்தாமல்  குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் கற்றுக்கொடுங்கள் பெரும்பாலான  கொள்ளை  சம்பவங்கள்  வயதான பெண்களின் கணக்கிலிருந்தே  பணங்கள் எடுக்கப்படுகிறது.   எனவே உங்களது  தாய்மார்களுக்கு  இது பற்றிய புரிதலை ஏற்படுத்துங்கள். அவர்கள் பணம் எடுக்க  செல்லும்போது நீங்களும் அவருடன் சென்று இதுபற்றிய விபரங்களை  விளக்கிச் சொல்லுங்கள். அதன் மூலம் அவரும் தெளிவு பெறுவார்.